 இன்றைய
சட்டப்பரப்பு அல்லது சட்டப்பரிமாணங்கள் என்பவை தொன்று தொட்டான சட்ட விடயதானங்கள் எனும்
கருத்துக்களில் இருந்து பெருமளவு தற்போது வேறுபடுவது கண்கூடு. உதாரணமாக குடியியல் குற்றவியல்
விடயதானங்களை கடந்து வணிகச்சட்டம் முகாமைச்சட்டம் போக்குவரத்து சட்டம் மருத்துவ சட்டம்
என்பவற்றோடு இன்று புலமைச்சொத்துரிமைச்சட்டம் பாரிய வளர்ச்சியை நோக்கி வளர்வதானது துரிதமான
இணைய புறநிலை வேவைகளின் விஸ்தரிப்பின் துலங்கல் என வரையறுக்கலாம்.  கணணியும் அதன் அதன் தாக்கங்களும் இன்று ஒவ்வொரு மட்ட
மனித சமூகத்தின் அடிவரை வியாபித்தள்ளது. வலியோரிடம் இருந்து நியாயமற்ற வளப்பங்கீட்டில்
எளியோரை காப்பது  சட்டத்தின் வகிபாங்கு.
இன்றைய
சட்டப்பரப்பு அல்லது சட்டப்பரிமாணங்கள் என்பவை தொன்று தொட்டான சட்ட விடயதானங்கள் எனும்
கருத்துக்களில் இருந்து பெருமளவு தற்போது வேறுபடுவது கண்கூடு. உதாரணமாக குடியியல் குற்றவியல்
விடயதானங்களை கடந்து வணிகச்சட்டம் முகாமைச்சட்டம் போக்குவரத்து சட்டம் மருத்துவ சட்டம்
என்பவற்றோடு இன்று புலமைச்சொத்துரிமைச்சட்டம் பாரிய வளர்ச்சியை நோக்கி வளர்வதானது துரிதமான
இணைய புறநிலை வேவைகளின் விஸ்தரிப்பின் துலங்கல் என வரையறுக்கலாம்.  கணணியும் அதன் அதன் தாக்கங்களும் இன்று ஒவ்வொரு மட்ட
மனித சமூகத்தின் அடிவரை வியாபித்தள்ளது. வலியோரிடம் இருந்து நியாயமற்ற வளப்பங்கீட்டில்
எளியோரை காப்பது  சட்டத்தின் வகிபாங்கு.
இந்த
வகிபாங்கு இன்று புலமைச்சொத்து  அல்லது கணணியியல்
குற்றங்கள் என்பன தொடர்பில் மிக அபரிதமான தளப்பரப்பையும் அதே வேளையில் மிக சொற்பமான
சட்ட ஆளுகை தன்மையையும் கொண்டுள்ளது.  இதற்கு
காரணமாக முதலில் பயிற்றப்பட்ட மனித வளமின்மையை காட்டலாம். கணணியியல் குற்றங்களை சட்ட
ஆளுமைக்குள் கொணர்ந்து அதன் மூலம் நிவாரணங்களை பெற உரிய ஆதாரங்களை தகுந்த நீதிமன்று
முன்பு நெறிப்படுத்துவது சாதாரண சட்ட அல்லது கணணி அறிவால் சாத்தியத்திற்கு அப்பாற்பட்டது.
இதற்கு
சிறந்த புலமைத்துவ சட்ட அறிவு அதோடு கணணி துருவற் தடயவியற் புலனாய்வு துறையில் ( Computer
hacking forensic investigation ) நிபுணத்துவம் என்பவை உட்சேரறட் தகுதிகளாகும் .அத்தோடு
இற்றைப்படுத்தல் என்பதும்தவிர்க்க முடியாதது. ஏனெனில் தினமும் புதுப்புது சாதனங்களை
இலத்திரனியல் தடவியற் துறையில் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். இத்துறையானது
கணணி புலனாய்வுகள் கணணிசார் குற்றங்கள் எண்மிய தடவியல் கணணி தரவு மீளெடுப்பு என நீள்கின்றது.
இதில்
தரவு மீளெடுப்பு என்பது தரவை கண்டுபிடித்தல் ( Discovering Data) அழிக்கப்பட்ட தரவை
மீட்டெடுத்தல் (Recovering deleted)எண்மியமாக்கலை மீள நிலைப்படுத்தல் (Encrypted)சிதிலமடைந்த
கோப்புக்களை நிகழுருவேற்றல் (Damaged file information) எனும் செயற்பாடுகளை  உள்ளடக்கியது.
 சட்டமுகவராண்மை
அல்லது நீதியியல் வழக்கப்படி பின்வருவன கணணியியல் குற்றங்களாக இன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சட்டமுகவராண்மை
அல்லது நீதியியல் வழக்கப்படி பின்வருவன கணணியியல் குற்றங்களாக இன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
01.Disloyal
Employees
02.Computer
break-in
03.Possession
of  pornography
04.Breach
of contract
05.Industrial
espionage
06.E-Mail
fraud
07.bankruptcy
08.Dispated
dismissals
                                  09.Web
page defacement
மேற்குறிப்பிடப்பட்ட
வகை குற்றங்களை நிரூபிக்கவும் நிவாரணம் பெறவும் சட்டவியல் கணணியியல் என இரு தொழிலாண்மை
வகைகளில் தேர்ச்சி அவசியம். சட்ட மாணவர்களது பரந்த பார்வை மற்றும் தொடர்ச்சியான இற்றைப்படுத்தல்
என்பன இலத்திரனியல் குற்றங்கள் சம்மந்தமான துறைக்கு அவர்களது எதிர்காலத்தில் சிறந்த
பொருளாதார அந்தஸ்துடன் வழிகாட்டும் என நம்பலாம்.
இலங்கையில்
முதன்முறையாக கணணி துருவற் தடயவியற் பயிற்சியை CICRA நிறுவனம் வழங்குகின்றது. பயிற்சியின்
பின்னரான பரீட்சையில் சித்தியடைவதை உறுதிப்படுத்தின் ஐரோப்பிய ஒன்றித்தால் வழங்கப்படும்
கணணி துருவற்  தடயவியல் புலன்விசாரணையாளர் எனும்
தகுதியை பெற முடியும். தற்போது  இத்தகுதி பணியிடங்கட்கு
ஐக்கிய அமெரிக்காவில் கடும் கிராக்கி நிலவுவதுடன்  வருமானமாக சுமார் $80000-$125000  வரை  அதாவது
LKR:10480000-LKR16375000 வரை பெறமுடியும். அதோடு கணணி என்ற சாதனம் மக்கள் கைகளில்
இருந்து நழுவும் வரை இத்துறைக்கான மவுசு குறைவடைய வாய்ப்பில்லை. 
அதோடு
இன்று இணைய யுத்தம் அங்கீகரிக்கப்படாத ஓர் போர் முறைமையாக நாடுகளிடையே உருவெடுத்துள்ளது.
இது வரும்காலங்களில் இலங்கை உட்பட அனைத்து நாடுகளின் தேசிய பாதுகாப்பு சார் பிரச்சனையாக
உருவெடுக்கும்  என்பதால் எம்நாட்டில் கூட அதி
உயர் வருமானம் தரக்கூடிய ஓர் துறையாக இது பரிணமிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இக்கட்டுரையை
தமிழிலேயே வரைய  முற்பட்ட போதும் தொழினுட்ப
சொற்களின் பொருட்கோடற் தெளிவின்மையை தவிர்க்க ஆங்கீல பாவனையை உட்புகுத்தியமை தவிர்க்க
முடியாததாயீற்று.
நன்றி
சண்டே
டைம்ஸ் 
15/07/2012.
 
 
