Social Icons

Pages

Showing posts with label அரியரெட்ணம் அர்ஜின். Show all posts
Showing posts with label அரியரெட்ணம் அர்ஜின். Show all posts

Friday, 6 November 2020

சாணக்கிய நீதி-பெண்கள்

 

 



மூன்று உலகங்களையும் காத்து ரஷிக்கும் மகா விஷ்ணுவே ஒரு பெண்ணின் மயக்கும் ஆற்றலின் முன்னால் தோற்றப் போனார் என்றால் அப்படி ஒரு பெண்ணிடம் ஏமாந்து போகும் ஒரு சாதாரண மனிதனை எப்படிப் பழி சொல்ல முடியும்? பெண் என்பவள் பார்ப்பதற்கே கவர்ச்சியுடன், மயக்கும் விதமாய் வசீகரிக்கும் தன்மை கொண்டவள். மனிதனுக்கு ஆசை காட்டித் துாண்டில் போடுவதில் அவள் கடவுளை விட அதிகமான வசீகரிக்கும் சக்தி கொண்டவள்.

மகிழ்ச்சியில்லாத இந்த உலகத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மனிதன் துாய்மையான பக்தியுடன் கடவுளை வணங்க வேண்டும். இந்த தேவலோக வாழ்க்கையின் சந்தோஷங்களை அடைய அவன் தன் மதத்தின் மறைகளில் கூறப்பட்டுள்ள ஒழுங்கு முறைகளைக் கண்டிப்பாக கடைப் பிடிக்க வேண்டும். இது முடியவில்லை என்றால் பெண்ணின் கவர்ச்சியில் மாட்டிக் கொள்ளாமலாவது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இது எதையும் செய்யாதவன் தன் ஒப்பற்ற  சக்தியை வீணாக்குவதுடன் தன் இளமையையும் வீணே தொலைக்கிறான்.

துரதிருஷ்டம் ஒருவனை எதிர்பாராமல் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். அதனால் பணத்தை சேமிப்பது என்பது எப்போது முக்கியம். பணம் இருந்தால் தான் ஒருவனால் ஒரு பெண்ணை வசீகரிக்க முடியும். ஆனால் இதில் ஒரு உண்மையைப் பார்க்க மறந்துவிடக்கூடாது. இரண்டுமே ஒரு நிலையில்லாதது. பணம் பெண் இரண்டுமே ஒரு மனிதனை எந்தக் கணத்திலும் ஏமாற்றி விடக் கூடியது.

குறிப்பாகத் திருமணத்தை முடிவு செய்யும் போது ஒருவன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவசரத்தில் எடுக்கும் எந்த முடிவும் அவனுடைய வாழ்க்கையை நிரந்தரமாக நாசமாக்கி விடும். சமூகத்தில் அவனுக்கு நிகரான அந்தஸ்து உள்ள குடும்பத்திலிருந்து தான் அவ் திருமணம் செய்ய வேண்டும். வெளிப்படையான அழகில்லாமல் இருந்தும் ஒரு நல்ல பரம்பரை வழிவந்த பெண் என்றால் அவளைத் திருமணம் செய்து கொள்ளத் தயங்கக் கூடாது. அதே நேரம் யோக்கியதை இல்லாத ஒரு குடும்பத்தில் இருந்து வரும் ஒரு பெண் எத்தனை அதிரூப சுந்தியாக இருந்தாலும் அவளை மனைவியாகத் தேர்ந்தெடுத்துவிடக் கூடாது.

பெண் என்பவள் ஆணை விட மிகவும் மென்மையானவள் என்று நம்பப் படுகிறாள். ஆனால் அவள் ஒரு ஆணைப் போல நான்கு மடங்கு வீம்பான உறுதி படைத்தவள். அலணை விட ஆறு மடங்கு துணிச்சலும் எட்டு மடங்கு உணர்வின் பலமும் கொண்டவள் பெண்.

ஒரு ஆண் தன் இல்லத்தரசி, தன் சினேகிதர்களின் மனைவிமார்கள், தன் மாமியார் போன்ற அனைத்துப் பெண்களிடமும் மரியாதை செலுத்த வேண்டும் முறையற்ற எண்ணங்களுடனும், தகாத உறவு கொள்ள ஆசைப்படும் பெண்களை நெருங்கும் ஆண்கள் மிகவும் மோசமான நடத்தையுடையவர்கள். ஒவ்வொரு மதத்திலும் பெண்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப் படுகிறார்கள். அவர்கள் எல்லோராலும் விரும்பப்படுகிறார்கள்.

அன்பு என்னும் நுால் மிகவும் வலிமையானது. போகீந்திரர் மரத்தைப் பிளந்து செல்லும் வலிமை பெற்றிருந்தார். ஆனால் தாமரையில் நுழைந்த பிறகு அவரால் வெளியே வரமுடியவில்லை. அதன் இதழ்களை துளைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. காரணம் தாமரை மலருக்கும் அதன் இதழ்களுக்கும் இடையே இருந்த அன்பின் நெருக்கம்! அன்பை விட வலிமையான ஒரு சக்தியை உலகம் இன்னும் பார்க்கவில்லை.

ஒரு பெண் தன் மேல் காதல் கொண்டு விட்டாள் என்னும் எண்ணத்தால் ஒருவன் தன்னை
ஏமாற்றி கொள்ளும்போது, அவளுடைய கைகளில் தான் ஒரு பொம்மலாட்ட பொம்மையாகிப் போனோம் என்பதை அவன் உணருவதில்லை.

மற்றவர்களின் ஜாடையான, பாவனை பொருந்திய அசைவுகளுக்கு தன் கவனத்தை திருப்பி பொஞ்சிப் பேசும் அற்பமான பெண்ணால் தன்னுடைய கற்பு நிலையைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. மற்ற ஆண்களுடன் நிச்சயமாக அவள் தகாத உறவை ஏற்படுத்திக் கொள்வாள்.

தன் கணவனின் குறிப்பான ஒப்புதல் இல்லாமல் நோன்பைக் கடைப்பிடிக்கும் பெண் அவனுடைய நீண்ட ஆயுளைக் குறைக்கிறாள். அவள் சாசுவதமான நரகத்திற்கு செல்ல விதிக்கப்படுகிறாள்.

ஒரு பெண் தனக்குக் கிடைத்துள்ள அத்தனையையும் வாரி வழங்கினாலும், பலவிதமான நோன்புகளை நோற்றாலும், எல்லா இச்சைகளையும் விட்டொழித்த வாழ்க்கையை வாழ்ந்தாலும் அத்தனை ஆன்மிகத் தலங்களுக்கு சென்று வந்தாலும் மனதில் சுத்தமானவளாக ஆக மாட்டாள். ஆனால் அவளுடைய கணவனின் பாதத்தில் விழுந்து வணங்கினால் அவள் எல்லாப் பாவங்களும் கழுவப்பட்டு நிச்சயமாக அவற்றிலிருந்து விடுபடுகிறாள்.

நேபாளத்தில் ஒரு நடைமுறை வழக்கம் உள்ளது அதன்படி திருமணமான ஒரு பெண். பெண் தாமிரப்பாரத்திலுள்ள நீரை எடுத்து தன் கணவனின் கால்களைக் கழுவி அப்படிக் கழுவிய நீரை தினமும் குடிப்பாள். இப்படிச் செய்வதன் மூலம் அவளுடைய கணவனின் ஆயுள் அதிகரிப்பதாக அவள் நம்புகிறாள். அத்தோடு அவன் மகிழ்ச்சியுடனும், ஆரேக்கியத்துடனும் செல்வத்துடனும் வாழ இது வகை செய்யும் என்றும் நம்புகிறாள்.

வஞ்சிப்பது, எச்சரிக்கை இல்லாத தைரியம் மினுக்குவது ஏமாற்றுதல், பேராசை, சீர் கெடுதல் மற்றும் சண்டை போடுதல் பெண்களுக்கு இயல்பான குணங்கள். இதனைப் பார்க்கும் போது ஒருவர் குழப்பம் அடையாமல் புரிந்து கொள்ள வேண்டும்.

கற்புள்ள, புத்திநுட்முள்ள, நற்குணமுள்ள, இனிமையான, கணவனிடம் விசுவாசமுள்ள பெண் தான் கணவன் கொடுக்கும் ஆதரவிற்குத் தகுதியான பெண். இப்படிப்பட்ட ஒரு பெண் மனைவியயாக அமைந்தால் அந்தக் கணவனுக்கு அது கடவுளின் செயலே! உண்மையில் அப்படி ஒரு பெண் மனைவியாகக் கிடைத்ததில் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவன் அவன்.

வாழ்க்கையின் பிணியின் நிவாரணமே ஒரு பெண்ணின் உதட்டில் இருக்கிறது என்று தீவிரமாக அவளின் பால் ஈர்க்கப்பட்டு விழுந்தவர்கள் பலர். பல கடவுளரும், மிக அதிகமான ஞானமுள்ள பண்டிதர்களும், சம்ஸ்கிருத்தை ஆழமாகக் கற்றறிந்த அறிஞர்களெல்லாம் கூட இப்படிப் பெண்ணிடம் மயக்கம் கொண்டிருந்திருக்கிறார்கள் எனும் போது ஒரு சாதாரண மனிதன் ஒரு பெண்ணிடம் சரணடைந்தால் அதனை எப்படிக் கடிந்து கொள்ள முடியும்! பெண் ஒரு வலிமையான அலைக்கழிப்பு.

மனிதனை எது மிக அதிகமாக வசீகரிக்கும் சுற்றி “பெண்” தான். அவனுடைய மனம் எப்போது சுற்றி வரும் மையப் புள்ளி அவள். அவளுடைய கவர்ச்சியிலும் மினுக்கலிலும் அவன் தன்னை இழந்து விடுகிறான். பேரர்வமும் பகுத்தறிவு இல்லாமல் இருக்கும் நிலையும் கொண்ட சிறையில் அவனை வெற்றிகரமாக சிறைப்பிடித்து விடுகிறாள்.

வடித்த சிலை போன்ற அமைப்புகள் கொண்டு மந்திரத்தால் மயக்கும் மிகச் சிறந்த பெண்ணாக இருந்தால் கூட கடைசில் அவளும் இரத்தம், சதை எலும்புகள் அடைத்த வெறும் பை தானே! இருந்தாலும் மனிதன் தன் இளமை, காதல் என்னும் முட்டாள் தனத்தால்வெறியூட்டப்பட்டு முடிவில்லாத வலி என்னும் சுழலில் மூழ்கிவிடுகிறாள்.

ஒரு பெண்ணின் வசீகரிக்கும் வழிகளிலிருந்து ஒதுங்கி இருப்பதே மிகப்பெரிய ஒழுக்கமாகும்.

“ஏய் விகாரமான கிழவியே! என்ன தேடிக் கொண்டிருக்கிறாய்? ஏதாவது தொலைத்து விட்டாயா?”

“முட்டாள் மனிதா, நான் என் தொலைந்து போன இளமையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று பதில் சொன்னாளாம் அந்தக் கிழவி.”

வயதாகி விட்டால் கூட, தன் வயதைவிடக் தான் இளமையாகத் தான் இருக்கிறோம் என்கிற கானல் நீர் போன்ற எண்ணத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறாள் பெண்.

தன் இளமையை கடைசி வரை இழுக்கும் விதமாய், தன்னை முடிந்தவரை கவர்ச்சிகரமாகக் காட்டும் முயற்சியில் எப்போதும் இருக்கிறார். ஒரு பெண்ணின் அழகான உடமையும் மனதை இழுக்கும் கவர்ச்சியையும் ஒரு மனிதன் ஏன் பார்க்க வேண்டும்? அவனுடைய உணர்ச்சிகளை பொழுந்துவிட்டு எரியச் செய்வதற்கா? எல்லாப் பெண்களும் இயற்கையாகவே ஒன்றுதான். மனிதன் அவளிடமிருந்து உடல் ரீதியாக பெறக்கூடிய இன்பத்தில் கூட மிகச் சில மாற்றங்களே உள்ளன.

பெரும்பாலும் ஒரு மனிதன், ஒரு பெண்ணின் அழக்கான தோற்றத்தாலும் மயக்கும் வசீகரத்தாலும் அடக்கமுடியாமல் துாண்டப்படுகிறான். மனிதன் இயல்பாகவே பல தாரங்களை நாடும் பழக்கம் கொண்டவதனாதலால், பல தரப்பட்ட பெண்களை அடைய மன்றாடுகிறான். இந்தப் பைத்தியக்காரத்தமான பின் தொடர்தலில் ஒரு விஷயம் அவன் கண்ணை மறைத்து விடுகிறது. தோற்றத்திலும், உடல் நெருக்கத்திலும் எல்லாப் பெண்களும் ஒரே மாதிரியானவர்கள் என்கிற உண்மைதான் அது. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் காமக் கலப்பில் ஈடுபடுவது ஒரு ஆணுக்கு முறையல்ல மாதவிலக்கின் சமயத்தில் ஒரு ஆண் தன் மணைவியுடன் உடலுறவில் ஈடுபடுதல் கூடாது. இப்படிச் செய்வது அவன் ஆயுளைக் குறைத்து விடும்.

நுட்பமான அறிவுடையவர்கள் ஒரு பெண்ணின் அறிவுரைகயைக் கேட்டு அதன்படி நடக்க மாட்டார்கள். ஒரு வீட்டில் நடக்கும் சர்ச்சைகளுக்குக் காரணம் பெண்கள் தான். அருவருக்கத்தக்க சண்டைகளையும் பாபகரமான செயல்களையும் துாண்டுவதில் முழுப் பொறுப்பும் அவர்களுடையது தான். இதனால் தான் முனிவர்கன் பெண்ணின் நிழலைப் பார்ப்பதில் இருந்து கூட விலகி இருந்தார்கள்.

ஒரு பெண்ணுக்குண்டான விரும்பத்தக்க குணங்களுடன் அவள் இருந்தால் தன் கணவனுக்கு விடியற் காலையில் ஒரு தாயைப் போலவும், பகல் நேரங்களில் ஒரு சகோதரியைப் போலவும் சேவை செய்வாள். அந்த நாள் இரவை நோக்கி செல்கையில் அவளே ஒரு சிறந்த ஜெமானியாக உருமாறி அவளுடைய உடலின் தேவைகளை பூர்தி செய்வாள். இப்படிப்பட்ட பெண் தன் கணவனின் தேவைகளைப் பரிபூரணமாக நிறைவேற்றுவதோடு அவனுடைய நம்பிக்கைக்கும் பாத்திரமாவாள். இவள் கவர்ச்சியாக இருக்கிறாளா அல்லது அழகில்லாமல் இருக்கிறாளா என்பது முக்கியமல்ல. ஆனால் தன் கணவனை எல்லாவிதத்திலும் கட்டுப்படுத்த அவளால் முடியும்.

 

Friday, 4 January 2019

புத்தாண்டின் புதிய சிந்தனைகள்




v மாற்றத்தைப் பர்சனலாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவசரப்படாதீர்கள், உணர்ச்சிவசப்படாதீர்கள்.

v நெகடிவ் எண்ணங்களை விட்டுவிடுங்கள்.

v ஒவ்வொரு பிரச்சனையும் ஒவ்வொரு வாய்ப்பு.

v காலத்தோடு ஒட்டி மாறுங்கள்.

v மாற்றத்திலிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம்.

v வியாபாரத்தில் தோல்வி, நெருங்கியவரின் மரணம், பிரிவு, ஏமாற்றம் எதுவுமே நிலையானதல்ல.

v இன்பம், லாபம், மகிழ்ச்சி, குதுாகலம் எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டவை.

v சுயாச்சாதாபம் பார்ப்பது வேலைக்கு உதவாது.

v இழப்பை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்.

v செய்வதையே செய்துகொண்டிருந்தால் இதுவரை கிடைத்ததே இனியும் கிடைக்கும்.

v அடுத்தவர் துக்கத்தை மாற்ற உதவுங்கள்.

v சந்தோஷமான வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் உங்களிடம் இருக்கின்றன.

v என்ன, ஏது என்று பார்க்காமல் மாற்றத்தை எதிர்க்காதீர்கள்.

v என்ன, ஏது என்று பார்க்காமல் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

v உங்களுக்கு நீங்களே ஒரு Change Manager.

v மாற்றத்தைத் திட்டமிடலாம்.

v உங்கள் பாதுகாப்பு வட்டத்தைவிட்டு முதலில் வெளியே வாருங்கள்.

v ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறும் போது முரண்பாடுகள் தோன்றும். இது சகஜமானதுதான்.

v சந்தித்தாக வேண்டியதை எதிர்கொள்ளுங்கள்.

v நீங்கள் எதை இழந்தீர்கள் என்பதல்ல, எங்களிடம் என்ன மிச்சமிருக்கிறது என்பதுதான் முக்கியம்.

v நீங்கள் இழந்த ஒவ்வொன்றுக்கும் ஈடாக நீங்கள் வேறொன்றைப் பெற்றிருக்கிறீர்கள்.

v எப்போதுமே இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. தோல்வி என்பது கீழே விழுவதல்ல. கீழேயே இருப்பது.

v ஊனமுற்று இருப்பதற்கும் முடமாகிப் போவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

v தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்.

v எதிர்ப்பாதால் மாற்றம் வலுப்பெறுகிறது.

v மாற்றம் என்பது கண் மூடிக் கண் திறப்பதற்குள் ஏற்பட்டுவிடாது.

v மாற்றத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

v மாற்றத்தை எதிர்பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

v சிறியதாக இருக்கும்போதே மாற்றத்தை இனம் காணக் கற்றுக்கொள்ளுங்கள்

v பழைய தீர்வுகளை வைத்துக் கொண்டு புதிய பிரசனைகளைத் தீர்க்க முடியாது.

v ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் நீங்கள் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க்.

v எல்லாமே ரிஸ்க்தான்!

-சிரித்தால் ரிஸ்க். ‘ஒரு மாதிரி’ என்பார்கள்.
-அழுதால் ரிஸ்க். செண்டிமென்டல் என்பார்கள்.
-ஒருவருக்கு உதவி செய்தால் ரிஸ்க். ஏன் தலையிடுகிறாய் என்று கேட்பார்கள்.
-உங்கள் கனவுகளைச் சொன்னால் ரிஸ்க். எகத்தாளம் செய்வார்கள்.
-சேமிப்பது ரிஸ்க். தொலைந்துபோகலாம்.
-காதலித்தால் ரிஸ்க். நீங்கள் காதலிக்கும் நபர் உங்களை விரும்பாமல் போகலாம்.
-நம்பிக்கை வைப்பது ரிஸ்க். நீங்கள் நினைப்பது நடக்காமல் போகலாம்.
-வாழ்வதே ரிஸ்க்தான். எந்த நேரமும் நீங்கள் இறந்து போகலாம்!

v நீங்கள் மாற வேண்டுமானால் ரிஸ்க்  எடுக்கத்தான் வேண்டும்.

v சிறிய மாற்றங்களே பல சமயங்களில் பெரிய பிரச்சனைகளைத் தீர்த்து விடும்.

v உங்கள் துயரத்தை நீங்கள் மறந்து விடுங்கள். அது தண்ணிர் ஓடுவது போல ஓடி மறந்து விடும் (ஜாப் 11.16 பைபிள்)

v கடலில் நீண்டிருக்கும் நிலத்தைப் போல் நீங்கள் இருக்க வேண்டும். அதன்மேல் அலைகள் தொடர்ந்து மோதினாலும் அது உறுதியாக நிற்கிறது. அதன் மேல் மோதும் ஆர்ப்பரிக்கும் அவைகள் அடங்கிய அமைதியாகின்றன-மார்கஸ் அரேலியஸ்.

v உராய்வின்றி ரத்தினங்களைக் பளபளப்பாக்க முடியாது. சோதனைகளின்றி மனிதரைச் சரியானவராக்க முடியாது-கன்/பூசியஸ்.

v சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும்போது சுமை தெரிவதில்லை-ஒவிட்.

v நமது உடலில் குறிப்பிட்ட அளவு விஷத்தைச் செலுத்தி நமது எதிர்ப்பு சக்திளைத் துாண்டி சில உடல் நோய்களுக்கு எதிராக எடலை நோய் எதிரிப்பு சக்தி பெற வைப்பது போல், வாழ்வின் எதிர்பாராச் சோதனைகளை எதிர்கொள்வதால், பிரச்சனைகளுக்கு எதிராக நம்மால் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்- டபிள்யூ. பேரன் உல்/ப்.

v நாம் ஏற்றுக்கொள்ள அவசியமானவற்றைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்வோம்.

v தைரியமாக இறுதிவரை போரிடுபவர்களுக்கு, வாழ்வின் இருளான எல்லாவ்றையும் வெற்றி கொள்வது சாத்தியம் – ஜேம்ஸ் ஆலன்.

v வளையாத கோபுரத்தைப் போல் நிமிர்ந்து நில். புயலின் அதிர்ச்சியும் அதை ஒன்றும் செய்யாது – தான்தே

v உங்கள் பயத்தை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தைரியத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்- ராபர்ட் லுாயிஸ் ஸ்டீ  வன்சன்

v முற்றிலும் புதிதாக ஆரம்பிப்பது அவமானமில்லை. அது ஒரு வாய்ப்பு –ஜார்ஜ் மாத்யூ ஆடம்ஸ்.

v எல்லாவிதக் கசப்பு, கோபம், சண்டை, போராட்டம், தவறான பேச்சையும், விரோதம் உட்பட, உங்களை விட்டு விலக்கி வையுங்கள். – எபிசி யன்ஸ் 4.35

v நாணல் போல மென்மையாகவும் வளையும் தன்மையோடும் இருங்கள், செடார் மரத்தைப் போல வளையாமல் இருக்காதீர்கள்.



 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது