Social Icons

Pages

Tuesday 24 July 2012

இலவச மனித உரிமைப்பாட பொதிகள்



மனிதன் மனிதனாக பிறப்பதன் வாயிலாக பெற்றுக்கொள்வதே மனித உரிமைகள் ஆகும். சட்டத்தின் பெரும்பங்கு மனிதனுக்கு அவன் யார் அவனது கடமைகள் மற்றும் உரிமைகள் என்னனென்ன என தெளிவிப்பதன் மூலம் சமுதாய ஒழுக்கத்தை கட்டிக்காத்தல் எனும் வகுதிக்குள் அடங்கி விடும்.  ஆனால் இது நடைமுறை சாத்தியமாக்கப்பட வேண்டும் எனில் அனைத்து தரப்பு மனிதர்களிடமும் இது பற்றிய பரப்புரை செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதற்கு உரிய மூலங்களிலிருந்து வழங்கல்கள் தடையின்றி வழங்கப்பெறுவது அவசியம். அந்த வகையில் பல தன்னார்வ அமைப்புக்கள் இப்பணியை மேற்கொள்கின்றன. இதற்காக வருடாந்தம் ட்ரில்லியன் கணக்கில் நிதி வளம் செயற்றியனுக்காய் வெளிப்பாச்சலுக்குள்ளாகின்றது. இவற்றை  அறியவும் பரப்புரை செய்யவும் இணையம் பெருமளவு துணை நிற்கின்ற போதும் கையில் தாள் வடிவில் வைத்து வாசித்து அறியும் போது கிடைக்கும் திருப்தி நம்மவர்கட்கு  மின்னுால் வடிவங்களில் கிடைப்பதில்லை என்பது உண்மை.


அந்த குறையை நிவர்த்திக்க பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமையியல் புத்தகங்கள் கடைகளில் கிடைப்பினும் விலை என்பது எம் எல்லோருக்கும் கசக்கும் என்பதும் இலவசம் என்பது இனிப்பானது என்பதும் பொதுவானது. எனவே சில இணையத்தளங்கள் மனித உரிமை சம்மந்தமான சில ஆரம்பநிலை விடயப்பரப்புக்களை தாள் அச்சுகளாகவும் மற்றும் குறுவட்டு வடிவிலும் ஆங்கீலம் உட்பட ( தமிழ் மொழியில் கிடைப்பனவுத்தகமை இல்லை) பல மொழிகளில் வண்ணமயமாக நமது வீட்டிற்கே அனுப்பி வைக்கின்றன நம்மிடத் நயா பைசா பெறாமலே ! குறிப்பிட்டஇணையத்தளங்களினுள் நுழைந்து இலவச பொதிகட்கான கேள்வியை மேற்கொள்ள இங்கு மற்றும் இங்கு சொடுக்குங்கள் . ஆனால் இவை உங்கள் வீட்டிற்கு வந்து சேர 2-4 வாரங்கள் எடுக்கலாம். ஆனால் நிச்சய நம்பகத்தன்மை உடையது. நான் இது வரை 3 பொதிகளை பெற்றுள்ளேன். ஆனால் சிரமம் என்னவென்றால் ஒரு தடவையில் ஒரு பொதிக்கான கேள்வியையே மேற்கொள்ளலாம். இன்னொரு பொதிக்காக மீண்டும் ஒரு தடவை கேள்விப்படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும் அவ்வளவே !!!
 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது