Social Icons

Pages

Thursday 31 December 2015

புத்தாண்டில் மனிதராக இருப்பதற்கான விதிகள்



01.நீங்கள் ஓர் உடலை பெறுவீர்கள்
நீங்கள் விரும்பினாலும் வெறுத்தாலும் உங்கள் வாழ்நாள் முழுவதும் இது உங்களுடையதுதான்

02.நீங்கள் பாடங்களைக் கற்பீர்கள்
மரபுசாரா பள்ளியான வாழ்க்கையில் நீங்கள் முழு நேரமாக
சேர்க்கப்படுவீர்கள். இந்தப்பள்ளியில் நீங்கள் தினந்தோறும் பாடங்களைக் கற்பதற்கான வாய்ப்பு ஏற்படும். உங்களுக்கு அந்தப் பாடங்கள் பிடித்திருக்கலாம் அல்லது அவற்றைப் பொருத்தமற்றதாகவோ மடத்தனமாகவோ நினைக்கலாம்.

03.தவறுகள் இல்லை, பாடங்கள் மட்டுமே
முயற்சித்து பார்த்து தவறுகளை அறிவதுதான் வளர்ச்சி. பரிசோதனை முயற்சி பலன் தரும் சோதனைகளைப் போல தோல்வியுற்ற சோதனைகளும் முயற்சியின் ஓர் அங்கம் தான்

04.கற்றுக் கொள்ளப்படும் வரை பாடம் திருப்பித் திருப்பி நடத்தப்படுகின்றது.
ஒரு பாடத்தை நீங்கள் கற்றுக் கொள்ளும் வரை அது பல்வேறு வடிவங்களில் உங்களுக்கு கற்பிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பாடத்தை நீங்கள் கற்ற பிறகு அடுத்த பாடத்திற்கு போகலாம்.

05. பாடங்களை கற்பதற்கு முடிவில்லை.
வாழ்க்கையின் எந்தப் பகுதியிலும் அதற்குரிய பாடங்களை் இல்லாமல் இருப்பதில்லை. நீங்கள் உயிரோடிருந்தால் கற்பதற்கான பாடங்கள் இருக்கும்.

06.இங்கேயை விட அங்கே சிறந்தது அல்ல.
உங்களின் அங்கே இங்கே ஆக மாறும் போது, நீங்கள் மற்றொரு அங்கேயை அடைவீர்கள். அது மீண்டும் இங்கேயை விட சிறந்ததாக தோன்றும்.

07.மற்றவர்கள் உங்களை காட்டும் கண்ணாடி தான்.
மற்றொரு நபரைப் பற்றிய சிலவற்றை நீங்கள் விரும்பவே, வெறுக்கவோ முடியாது. அது உங்களிடம் நீங்கள் விரும்புவதையோ , வெறுப்பதையோ பிரதிபலிக்காத வரை.

08.நீங்கள் வாழ்க்கையில் என்னவாகப் போகிறீர்கள் என்பது உங்கள் கையில் தான்.
உங்களுக்குத் தேவையான உபகரணங்களும் வசதிகளும் உங்களிடம் இருக்கின்றன.  அதை வைத்து என்ன செய்வது என்பது உங்கள் விருப்பம். சாய்ஸ் உங்களுடையது.

09.உங்களுக்கான விடைகள் உங்களுக்கு உள்ளேயே உள்ளன.
வாழ்க்கையின் கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்குள்ளேயே உள்ளன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவற்றைப் பார்ப்பதும் கவனிப்பதும் நம்புவதும் தான்.

10. நீங்கள் இவை எல்லாவற்றையும் மறந்து விடுவீர்கள்.

அனைத்து சட்டநோக்கு வாசகர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.................

Friday 25 December 2015

சில்லறையை வச்சுக்கோ

அந்த மருந்துக்கடைக்காரர் மருந்துச்சீட்டை என்னிடம் திருப்பிக்கொடுத்தார்.  காத்திருக்க வைத்ததற்கு மன்னிப்பு கோரினார். பின்னர் பதிவேடு ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டது என விளக்கினார். கடையின் முன்புறத்தில் உள்ள பதிவேட்டைப் பயன்படுத்த முடியுமா எனக் கேட்டார்.  பரவாயில்லை என கூறி நான் முன்புறம் சென்றேன்.
 
அங்கே மருந்து வாங்குவதற்கான வரிசையில் ஒரு சிறுமி மட்டுமே நின்றிருந்தாள். அவளுக்கு ஏழு வயதிற்கு மேலே இராது. குழந்தைளுக்கான மருந்து போத்தல் ஒன்று கவுண்டரில் வைக்கப்பட்ருந்ததது. பச்சையும் வெள்ளையுமாக கோடுகள் இட்ட ஒரு சிறிய, சில்லறை காசு பர்ஸை தன் நெஞ்சுடன் இறுக்கிப் பிடித்திருந்தாள்.

நான் எனது குழந்தைப்பருவத்தில் பாட்டியின் அலமாரியருகே பெரிய மனுசி போல ஆடையணிந்து விளையாடியதை அந்த பர்ஸ் எனக்கு ஞாபகப்படுத்தியது. நான் பெரிய ஆடைகள் நகைகள் தொப்பி ஸ்கார்ப் அணிந்து வீட்டை சுற்றி வருவேன். யாராவது காசு கொடுத்தால் பெரிய மனிசித்தனமாக நடந்து கொள்ளுவேன். நான் ஒரு நாள் பாவனையாக டாலர்  ஒன்றை ஒருவரிடம் கொடுத்த போது அதற்காக அவர் எனது நிஜ காசுகளை குடுத்து பர்சில் வைத்துக்கொள் என கண்ணடித்தது எனக்கு இப்போதும் ஞாபகம் உள்ளது.

இப்போது மருந்துக்கடைக்காரர் அச்சிறுமியை மருந்தை எடுத்துக்கொள்ளுமாறு மணியை அடித்தார். அவள் நடுங்கும் கைகளால்  பர்ஸ்க்குள் இருந்து ஒரு கூப்பன், ஒரு டாலர் நோட்டு மற்றும் கொஞ்சம் சில்லறைகளை எடுத்தாள். அவள் தனது பணத்தை எண்ணியபோது முகம் சிவப்பதை கண்டேன். அவளிடம் மருந்து விலைக்கு ஒரு டாலர் குறைவாக இருப்பதையும் கண்டேன். படக்கென்று ஒன்றைக் கண்ணடிப்புடன் ஒரு டாலர் நோட்டை ’போட்டேன். அவளுக்கு மருந்து கொடுக்கப்பட்டு விட்டது என்பதற்கு அடையாளமாக மணியை அடிக்கும் படி சைகை செய்தேன். அப்பெண் தான் எண்ணாத மீதச்சில்லறைகளை எடுத்துக் கொண்டு மருந்துப்போத்தலுடன் கடையை விட்டு வேகமாக வெளியேறினாள்.

நான் கடையிலிருந்து வெளியேறி காரை நோக்கிப் போனபோது யாரோ எனது சட்டையைப் பிடித்து இழுப்பதை உணர்ந்தேன். அது அந்த சிறுமி தான். அவள் தனது பெரிய பழுப்பு நிறக்கண்களால் என்னைப்பார்த்தாள். புன்னதை்தாள். தனது கரங்களால் எனது கரங்களை வளைத்திருந்தவள் பின் தனது குட்டிக்கையை என் முன் விரித்தாள். கை நிறையக்காசு. நன்றி என முணுமுணுத்தாள்.
பரவாயில்லை என்ற நான் புன்னகையுடன் கண்ணடித்து மீதச்சில்லறையை வச்சுக்கோ என்றேன்.
 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது