Social Icons

Pages

Wednesday 14 June 2017

வாக்குமூலம்-01




என்னை ஒத்த வயதினருக்கும் இல்லது கனிஸ்டர்களுக்கும் ஏன் சில பல சிரேஸ்டர்களுக்கும் கூட வடகிழக்கில் எந்தெந்த இடங்களில் தமிழரின் குடியிருப்புக்கள் என்பன தொடர்பில் ஒரு தெளிவான பார்வை இல்லை என்பதை மட்டும் வருத்தத்துடனும் வெட்கத்துடனும் ஏற்றுக் கொள்கின்றேன். இன்றைய காலகட்டத்தில் அதுவும் இளைஞர்கள் பலர் பல்வேறு சமூகங்களில் இருந்து தமிழரின் நிலத்தை ஒரு பொருளாதார பலமாக அல்லது பலவீனமாக பார்க்கின்ற அணுகுமுறையை என்னால் அவதானிக்க கூடியதாக உள்ளது.

உண்மையில் தமிழரின் பொருளியல் சார் நலன்கள் அல்லது வளங்கள் இலங்கைத்தீவின் எல்லையை கடந்தவை அல்லது  (தீவினுள்) புவியியற்பரப்புடன் தொடர்பு படாதவை. எனவே தமிழரின் நிலங்களை கையகப்படுத்துவது என்பது குறித்துரைக்கும் அளவிற்கு அவர்களின் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கும் என்பது ஏற்கமுடியாது. ஏனெனில் துயர்பகிர்ந்த அல்லது பகிர்கின்ற எமது நெடுந்துார போராட்டத்தில் தமிழர்கள் இறையாண்மை உள்ள அரசிடம் எவ்வித பொருளாதார உதவிகளையும் கோரவில்லை. மாறாக அவ்வரசின் அங்கங்களே பலமுறை தமழர்களிடமும் அவர்களின் ஆயுத அலகான விடுதலைப்புலிகளிடமும் அவ்வவ்போது பொருளதார ரீதியில் உதவிகளையும் சன்மானங்களையும் பெற்று வந்தனர்.

ஆனால் அவற்றையும் தாண்டி நிலம் என்பது எமது இருப்பிற்கான ஒரு ஆதாரம் என்பது யாராலும் எப்போதும் மறுதலிக்கப்பட முடியா உண்மை. அதுவே இவ்நெடுந்துயர் எம்மை இன்று வரை சூழ்ந்திருக்கவும் காரணம். ஆனால் இன்று அது பொருளாதாரம் என்ற ஒன்றின் மூலம் வீழ்த்தப்படும் எனில் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்ற கேள்வி எமக்குள் இயல்பாக எழுவதை நாம் தவிர்க்கக் கூடாது.


 பிரபல ஆங்கில துப்பறியும் ஆயத கலாச்சார எழுத்தாளரான Frederick Forsyth என்பவர் எழுதிய THE KILL LIST எனும் புத்தகத்தில் வெள்ளைமாளிகை ஒரு கட்டளையை ஒரு போர்வீரனுக்கு அனுப்புகின்றது. அது இதுதான்……The Preacher, Identify, Locate, Destroy.. இன்று இந்த கட்டளை ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் வர வேண்டும். இந்த நான்கு கமாக்களில் முதலாவதை தாங்கள் அடையாளம் காணாமலிருந்தால் இதை படிப்பதை இத்துடன் நிறுத்துங்கள்.

அடையாளம் கண்டால் தமிழரின் பூர்வீக நிலங்கள் அல்லது எல்லைப்பரப்புக்கள், அதன் வளங்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள் (அரசு சார் அல்லது அரசு சாரா) , குறித்த புவியியற் பிரதேசத்திற்கான நேரடி நிதிப்பாய்ச்சல்கள் அல்லது சாத்தியங்கள் என்பன குறித்த திறந்த உரையாடல்கள் அல்லது மிகக்குறைந்தளவிற்கு ஒரு எழுத்து மூல ஆவணமாவது வெளிப்படையாக தமிழர் மத்தியில் இருக்க வேண்டும். அதற்கு அரசியல் கட்சி சாரா புத்திஜீவிகள் அல்லது அமைப்பகங்கள் உதவ வேண்டும். அல்லது தொடர்ச்சியாக எல்லா பக்கத்தாலும் இருப்பை இழக்க வேண்டி நாம் உந்தப்படுவோம்.

அர்ஜின்
14-06-2017
 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது