Social Icons

Pages

Thursday 15 November 2012

அதிகாரத்தை அடைய 48 வழிகள்


மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள் , நேரான மரங்களே முதலில் வெட்டப்படும், நேர்மையான  மனிதர்களே  முதலில் பழி துாற்றப்படுவார்கள், வளைந்து கொடுங்கள் வாழ்க்கை இலகுவானதாக இருக்கும் --- சாணக்கியன் பொன் மொழி   




இன்று புதியதோர் புத்தக அறிமுகத்தடன் உங்களை சந்திக்கின்றேன். நான் தொடர்சியாக அச்சிட்ட புத்தக வடிவிலும் மின் நுால்களாகவும் பல சுய முன்னேற்ற தொடர்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டுபவன். இவை அனைத்துமே பெரும்பாலும் சுயசிந்தனை, சுயகட்டுப்பாடு, சுய ஆக்கம் எனும் கோட்பாடுகளை பற்றியே சூழ்ந்திருக்கும். ஆனாலும் ”அதிகாரத்தை அடைய 48 வழிகள்” எனும் புத்தகம் சற்று வித்தியாசமாகவே எனக்கு பட்டது. இது நியுயோர்க்கை சேர்ந்த இராபர்ட் கீரின் என்பவரால் படைக்கப்பட்டு சென்னை பல்கலைக்கழக முனைவர் எஸ்.எஸ்.குமார் அவர்களால் தமிழிற்கு மொழி மாற்றம் செய்யப்பட்டது. இப்புத்தகம் இந்திய மதிப்பில் ரூபா.199 ஆகும். இலங்கையில் சுமார் ரூபா.700 அளவில் விற்பனையாகின்றது. இதை என்னால் LAKE HOUSE புத்தக விற்பனை நிலையத்தில் மட்டுமே விற்பனைக்கு பெறக்கூடியதாக இருந்தது. 325 பக்கங்கள் உடைய இப்புத்தகம் உயர்ரக தாளில் அச்சிடப்பட்டுள்ளமையும் வர்ணக்கலவை மற்றும் அதிகரித்த புள்ளி அச்சளவு என்பன புத்தக விலையில் கணிசமான பங்களிப்பு வழங்கியுள்ளது போல தோன்றுகின்றது. அதோடு நேரடி மொழி மாற்று முறைமை கையாளப்பட்டிருப்பதால் சில இடங்களில் மறைபொருட் தெளிவை காண்பது கடினமாவேயுள்ளது. இப்புத்தகத்தை பெற google இல் google செய்த பின்னரும் கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ்ப்பதிவர்களிடம் இருந்து இந்த நுால் வருடப்படாமல் தப்பி விட்டது போலும்.

இனி புத்தக விடய தானத்தினுள்,
நான் ஏற்கனவே கூறியவை போல் மற்ற எல்லா புத்தகங்களையும் விட இது ஒழுக்கமுறை சாரா, கபட, இரக்கமற்ற மற்றும் கற்பிக்கின்ற நுாலான அதிகாரத்ததை அடைய 48 விதிகள் என்பது நடைமுறை வாழ்விற்கு, நடைமுறை வாழ்வியலிற்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற விடயங்களை எட்டுவதோடு 500 வருட கால ராஜதந்திரிகள், போர் வீரர்கள், வஞ்சியர் மற்றும் பிரபல ஏமாற்றும் பேர்வழிகள் விட்டுச்சென்ற வழிமறைகளையும் தெளிவு படுத்தி நிற்கின்றது.

பொதுவாக புத்தகங்கள் உங்கள் முழுத்திறனையும் பயன்படுத்துங்கள்

அல்லது வெளிப்படுத்துங்கள் என்றே ஆரம்பமாகும் வேளையில் 

இப்புத்தகமோ ”தலைவரை விட எப்பொழுதும் அதிகமாக ஒளி 

வீசாதீர்கள்” என்று ஆரம்பமாகின்றது. தலைமைத்துவத்தை அல்லது

அதிகார இருப்பை அடைவது மற்றும் தொடர்சியாக தக்க வைப்பது
என்பதற்கான 48 சாணக்கிய விதிகளையும் காரண காரிய

விளக்கங்களையும் அளிக்கின்ற இந்நுால் உண்மையிலேயே ஓர் 

தலைமைத்துவ வழிகாட்டி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

2 comments:

 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது