Social Icons

Pages

Wednesday 18 February 2015

சமூக வலைத்தள கணக்குகளை அழிப்பது எப்படி ?



இன்றைய தொழினுட்ப உலகின் ஆளுகைக்குள் இணையத்தின் சக்தி மிக அதிகம். அத்தோடு தனிமைக்கான உரிமை (Right to Privacy) மற்றும் தரவுப் பாதுகாப்பு (Data Protection) என்பன இணையப் பாவனையால் இன்று கேள்விக்குள்ளாகி உள்ளன.

இதனை வலுவாக்கும் காரணிகளாக நாம் பயன்படுத்தும் சமூக இணையத்தளங்கள் விளங்குகின்றன. நாம் புகுபதிகை  (Log in) செய்வதற்காக பயனர் கணக்குகளை உருவாக்கும் போதும் தொடர் பாவனையின் போது தொடர்ச்சியாக எமது அனைத்து தனிப்பட்ட விபரங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவின்றோம். இவற்றை அத்தளங்கள் தரம் பிரித்து குறிப்பிட்ட துறைக்கான விளம்பரதாரர்களிடம் விற்று கொள்ளை இலாபம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டன. உதாரணமாக திருமணத்துடன் தொடர்புடைய பதிவுகளையோ அல்லது கருத்துக்களையோ முகப்புத்தகத்தில் (FACE BOOK) நீங்கள் இற்றைப்படுத்தின் அருகில் திருமணத்துடன் தொடர்புடைய விளம்பரங்களை காட்டப்படுவதை அவதானிக்க முடியும். 

பெரும்பான்மையான சமூக இணையத்தளங்கள் கணக்கு தொடங்கும் போது பின்பற்றும் இலகு படிமறைகளை கணக்கு மூடும் போது அளிப்பதில்லை. அவ்வாறே அளித்தாலும் அவை உங்களைப்பற்றிய எல்லா தகவல்களையும் தமது தரவுத்தளத்திலிருந்து அழித்து விடும் என சொல்வதற்கில்லை. அத்தோடு நாமும் பல இணையத்தளங்களில் விபரங்களை பதிவிட்டு கணக்குகளை ஆரம்பித்து விட்டு பின்னர் அவற்றை மறந்து விடுவோம். நாம் மறப்பதால் நமது தகவல்களை மறைக்கின்றோம் என்பது பொருளாகாது. அவை எமது தகவல்களை தொடர்ந்து தமது சேமிப்பகங்களில் சேமித்து வைத்திருக்கும்.

இப்பிரச்சினைகட்கு தீர்வாக account killer எனும் இணையத்தளம் அமைந்துள்ளது. இத்தளத்தின் உதவியால் நாம் பாவிக்க மறந்த அல்லது நாம் ஆரம்பித்த ஆனால் இப்போது தேவையில்லாத சமூக இணையத்தளங்களின் கணக்குகளை அழித்து விடலாம். ஆனாலும் அச்சமூக வலைத்தளங்களின் தன்மையை பொருட்டு கணக்கு அளிப்பு உறதி செய்யப்படும். இவ்விணையத்தளம் நிற ரீதியாக இலகுவாக அழிக்க கூடியவை மற்றும் அழிப்பதற்கு கடினத்தன்மை உடையவை என சமூக இணையத்தளங்களை வகைப்படுத்தியுள்ளது. முழுமையான தீர்வாக இல்லாவிடினும் நேரமில்லா இந்நாட்களில் தேவையற்ற தகவல்களில் இருந்து எம்மை பாதுகாக்க இத்தளம் ஓர் பயனுள்ள தேர்வு. ஒரு முறை முயன்றுதான் பாருங்களேன். 

No comments:

Post a Comment

 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது