Social Icons

Pages

Friday 12 July 2013

வட மாகாண சபை தேர்தலும் தமிழர் தீர்வுகளும்


இன்றைய சமகால இலங்கையிலும், சர்வதேச அரங்கின் இலங்கைத்தீவின் கண்காணிப்புகளிலும் முதன்மை பெறுவது வட மாகாண சபை தேர்தலாகும். இது சாதாரண ஓர் ஜனநாயக வழமைச் செயல்முறைமை எனில் இந்தளவு முக்கியதுவம் காரியமற்றது. இன்று இலங்கை அரசிற்கு உள்ள இரண்டு பிரச்சினைகளாக போர்க்குற்றங்கள் மற்றும் இனப்பிரச்சனை தீர்வு. இனப்பிரச்சனைக்கான தோற்றுக்காரணி அழிக்கப்பட்டாலே போர்க்குற்றங்கட்கான அழுத்தக்காரணிகளும் நீக்கப்படும் என்பது திண்ணம்.


30 வருட இலங்கையின் கசப்பான அனுபவத்தையும் உலகின் தேசிய நலன் எனும் கோட்பாட்டிற்கு லங்காபுரியை பொறுத்தளவில் சகிக்க முடியா உச்ச அச்சுறுத்தலை கொண்டிருந்தவர்களை நிர்மூலப்படுத்தியதாக அறிவித்த பின்பு அவ்அச்சுறுத்தலுக்காக தோற்றுவாயை ஒரேயடியாக சர்வதேசத்தின் முன்பு துடைத்தழிப்பதற்கு கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பு. முன்பு 13ம் திருத்தத்தில் ஒன்றுமில்லை என வாதிட்ட தமிழ் தேசியவாதிகள் இன்று அதை பற்றி விமர்சிக்கவும் பிச்சு புடுங்கவும் தொடங்கி விட்டார்கள். எல்லாம் அதிகார வேட்கையும் அரசியல் ஆசையும் தான். ஓர் சட்டமாணவன் என்ற வகையில் எந்த வித அதிகார பகிர்வு ஆணைகளையோ சுயாட்சி அதிகாரத்தையோ முகத்தளவில் கூட கொண்டிராத 13ம் திருத்தம் இன்று தமிழ் தேசியவாதிகளாக தம்மை அடையாளப்படுத்தி கொள்வோரால் கூட உச்சளவில் பிரஸ்தாபிக்கப்படுகின்றது என்பது என்னை பொறுத்தளவில் சகிக்க முடியாத அல்லது நகைப்பிற்குரிய ஓர் விடயதானம்.

ஆனால் அதைக்கூட இலங்கை தேசியவாதிகள் இறையாண்மையின் அச்சுறுத்தலாகவும் தமிழர்கட்கான தனிநாட்டின் முதற்படியாகவும் சித்தரிப்பதை என்னவென்று கூற முடியும். தற்போது அவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு பிறப்பித்துள்ள கட்டளைகள். மாகாண முறைமை ஒழிக்கப்பட வேண்டும். இடைக்காலத்தில் அதாவது ஒழிப்பு முறைமையை முற்றுப்படுத்தும் வரைக்கும் 5 கட்டளைகளை உடனடியாக தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும்.

0 1. மாகாணங்களுக்குரிய பொலிஸ் அதிகாரங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.
0  2. மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்களை ரத்து செய்யப்பட வேண்டும்.
0  3. மாகாண இணைவிற்கான அதிகாரத்தை களைய வேண்டும்.
0 4. பெரும்பான்மை மாகாண சம்மதத்தின் பெயரல் ஓர் சட்டத்தை மத்திய அரசு ஆக்கின் அது அனைத்து மாகாணங்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.
0 5. மத்திய அரசு பிறப்பிக்கும் அனைத்து ஆணைகளும் மாகாண சபைகளை நேரடியாக கட்டுப்படுத்த வேண்டும். .

என்னை பொறுத்தளவிலே மேற்கூறப்பட்ட விடயங்களில் 04 ஐ தவிர அனைத்துமே 13ம் திருத்தத்தின் முகத்தளவிலேயே கோரிக்கைகளுடன் ஒத்துப்போவதாக உள்ளது. ஏனெனில் இங்கு மத்திய அரசு ஓர் சட்டமூலத்தை ஆக்கின் அது சம்மதளித்த மாகாண சபைகட்கு மட்டும் ஏற்புடையதாகுமே தவிர மற்ற சபைகளை பிணிக்கமாட்டாது.
ஆனால் இதில் உள்ள சூட்சுமம் இந்த தேர்தல் தமிழ் மக்களின் 60 வருட கால போராட்டத்திற்கு ஓர் முடிவை இட்டு விட்டதாகவும் தமிழர்கள் யுத்த முடிவு (POST WAR) என்ற தளத்தில் இருந்து முரண்பாட்டு முடிவு (POST CONFLICT) என்ற தளத்திற்கு தம்மை இந்த வட மாகாண சபை தேர்தல் மூலம் நகர்த்தி விட்டதாகவும் ஆனால் இதை ஏற்காத இலங்கை தேசியவாதிகளை கூட விஞ்சி இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கட்கு ஓர் ஜனநாயக ரீதியில் தீர்வை பெற்று கொடுத்து விட்டதாகவும் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசின் சார்பில் இலங்கை அரசாங்கத்தால் காட்டி விட முடியும்.

அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்பதானது ஜனநாயன விழுமியங்னை தமிழர் மதிக்கவில்லை என்பதை நிகழளவில் விடுத்து வெற்றியின் தறுவாயில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அதிகார நாற்காலியை விட தயாரில்லை என்பதையும் அதை எதிர்க்கின்ற தமிழ்க் கட்சிகள் கூட அதே தறுவாயில் இருப்பின் இதை முடிவைத்தான் எடுப்பார்கள் என்பதையும் யாரும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு வரலாற்றிலிருந்து உதாரணங்களை பதிவிட ஆரம்பித்தால் 60 வருட கால வரலாற்றை மீள்பிரசுரம் செய்வதை விடுத்து எனக்கு மாற்றுபாயமும் இல்லை.

ஆனால் 13ம் திருத்தத்தினுாடான அதிகார பரவலாக்கம் வெறும் கானல் நீர்தான் அதை அதன் உட்பிரிவு அலசல்களுடன் கணித ரீதியாக அமைவுறுத்தியுள்ளேன். அதாவது அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள சட்ட உறுப்புரைகளையும் அந்த அதிகாரங்கள் பறிக்கப்பட வழிசமைக்கும் சட்ட உறுப்புரைகளையும் நேர்ப்படுத்தி விளைவு பூச்சியம் என அதாவது அதிகார பகிர்வு என்பதே இல்லை என காட்ட முயற்சிக்கின்றேன்.

இது சட்டவாக்கதுறையில் (Legislature) மாகாண சபைகளின் நிலைமையை காட்டுகின்றது.



இது மாகாண சபைகளின் நிறைவேற்றுத்துறை (Executive) நிலைமையை காட்டுகின்றது.


No comments:

Post a Comment

 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது