Social Icons

Pages

Friday 12 July 2013

மனிதராக இருப்பதற்கான விதிகள்


01.நீங்கள் ஓர் உடலை பெறுவீர்கள்
நீங்கள் விரும்பினாலும் வெறுத்தாலும் உங்கள் வாழ்நாள் முழுவதும் இது உங்களுடையதுதான்

02.நீங்கள் பாடங்களைக் கற்பீர்கள்
மரபுசாரா பள்ளியான வாழ்க்கையில் நீங்கள் முழு நேரமாக சேர்க்கப்படுவீர்கள். இந்தப்பள்ளியில் நீங்கள் தினந்தோறும் பாடங்களைக் கற்பதற்கான வாய்ப்பு ஏற்படும். உங்களுக்கு அந்தப் பாடங்கள் பிடித்திருக்கலாம் அல்லது அவற்றைப் பொருத்தமற்றதாகவோ மடத்தனமாகவோ நினைக்கலாம்.

03.தவறுகள் இல்லை, பாடங்கள் மட்டுமே

முயற்சித்து பார்த்து தவறுகளை அறிவதுதான் வளர்ச்சி. பரிசோதனை முயற்சி பலன் தரும் சோதனைகளைப் போல தோல்வியுற்ற சோதனைகளும் முயற்சியின் ஓர் அங்கம் தான்

04.கற்றுக் கொள்ளப்படும் வரை பாடம் திருப்பித் திருப்பி நடத்தப்படுகின்றது.
ஒரு பாடத்தை நீங்கள் கற்றுக் கொள்ளும் வரை அது பல்வேறு வடிவங்களில் உங்களுக்கு கற்பிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பாடத்தை நீங்கள் கற்ற பிறகு அடுத்த பாடத்திற்கு போகலாம்.

05. பாடங்களை கற்பதற்கு முடிவில்லை.
வாழ்க்கையின் எந்தப் பகுதியிலும் அதற்குரிய பாடங்களை் இல்லாமல் இருப்பதில்லை. நீங்கள் உயிரோடிருந்தால் கற்பதற்கான பாடங்கள் இருக்கும்.

06.இங்கேயை விட அங்கே சிறந்தது அல்ல.
உங்களின் அங்கே இங்கே ஆக மாறும் போது, நீங்கள் மற்றொரு அங்கேயை அடைவீர்கள். அது மீண்டும் இங்கேயை விட சிறந்ததாக தோன்றும்.

07.மற்றவர்கள் உங்களை காட்டும் கண்ணாடி தான்.
மற்றொரு நபரைப் பற்றிய சிலவற்றை நீங்கள் விரும்பவே, வெறுக்கவோ முடியாது. அது உங்களிடம் நீங்கள் விரும்புவதையோ , வெறுப்பதையோ பிரதிபலிக்காத வரை.

08.நீங்கள் வாழ்க்கையில் என்னவாகப் போகிறீர்கள் என்பது உங்கள் கையில் தான்.
உங்களுக்குத் தேவையான உபகரணங்களும் வசதிகளும் உங்களிடம் இருக்கின்றன.  அதை வைத்து என்ன செய்வது என்பது உங்கள் விருப்பம். சாய்ஸ் உங்களுடையது.

09.உங்களுக்கான விடைகள் உங்களுக்கு உள்ளேயே உள்ளன.
வாழ்க்கையின் கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்குள்ளேயே உள்ளன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவற்றைப் பார்ப்பதும் கவனிப்பதும் நம்புவதும் தான்.


10. நீங்கள் இவை எல்லாவற்றையும் மறந்து விடுவீர்கள்.

No comments:

Post a Comment

 

சட்டம்

சமூகத்தை ஆளும் ஓர் தொகுதி விதிகள்---சட்ட பீடம் கற்பித்தது

சட்டம்

சட்டம் அரசியலமைப்பில் இருந்து தோன்றியது. அரசியலமைப்பு அரசியலில் இருந்து வெளிவந்தது அரசியல் துப்பாக்கி முனையில் மட்டுமே புலப்படுவது----- வாழ்க்கை எனக்கு காட்டியது